இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் பெயர்கள், சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை, ஹிந்தியில் மாற்றி இருப்பது, அப்பட்டமான ஹிந்தி திணிப்பு.
புதிய சட்டங்களை மாற்றி அமைத்து, இச்சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்த வேண்டும். சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை, மீண்டும் ஆங்கிலத்திலேயே மத்திய அரசு மாற்றம் செய்ய வேண்டும்.