ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை தமிழக மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. ஆவின் மூலம் தினமும் 34 மில்லியன் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை ஆரஞ்சு, பச்சை, நீலம் மற்றும் ஊதா நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், பால் பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில், நிகழாண்டில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் கூறியதாவது:
ஆவின் நிறுவனம் சார்பில், வெண்ணெய், நெய், பால்கோவா, லஸ்சி, மோர், தயிர் மற்றும் ஜஸ் கிரீம் போன்ற பால் பொருள்களை தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பண்டிகை காலத்தில் இனிப்புவகைகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,

இந்த ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் உள்பட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் நெய் 100 டன் அதிகமாக விற்க திட்டமிட்டப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த இனிப்பு வகைகளை, ஆவின் மூலமாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்று விற்கவும் திட்டமிட்டுள்ளோம்
என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here