நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபரான அதானியைப் பற்றிக் கேள்விப்பட்டுருப்பீர்கள். கடந்த பத்து ஆண்டுகளில் நம் நாட்டின் வளர்ச்சியை விட அதானியின் வளர்ச்சிதான் பல மடங்கு உயர்ந்திருக்கிறது..

2024 மக்களவைத் தேர்தல் தற்போது ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தான் ஒரு மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குற்றங்கள் மற்றும் ஊழலை அம்பலப்படுத்தும் OCCP அமைப்பு மூலம் வெளிவந்திருக்கின்ற அந்த கட்டுரை முழுக்க முழுக்க அதானியின் நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

2014-ல் அதிமுக ஆட்சியின்போது இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றது தான் அந்த கட்டுரையின் சாரம்சம்..

24 கப்பல்களில் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி மொத்தத்தையும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றுள்ளது. இப்படியாக, 2012 – 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.6000 கோடி அளவுக்கு நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2,330 என்ற விலையில் கொள்முதல் செய்த நிலக்கரியை, தமிழக அரசிடம் ஒரு டன் ரூ.7650 என்று விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது அதானி நிறுவனம்.

தரம் குறைந்த நிலக்கரியாக இந்தோனேசியாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தரத்தை உயர்த்தி காண்பிக்கவும், விலையை அதிகப்படுத்தவும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

விலையை அதிகப்படுத்துவதற்காக இந்தோனேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு நிலக்கரி கப்பல்கள் வருவதற்கு இடையில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், சிங்கப்பூரில் உள்ள அதானி நிறுவனத்துக்கு நிலக்கரி விற்கப்பட்டு, அதன்பிறகு தமிழகம் கொண்டுவந்தாக போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி மூலம் ரூ.6000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே கட்டுரையில் விளக்கமளித்த அதானி நிறுவனம், “ஊழல் எதுவும் நடைபெறவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், “நிலக்கரி சரியான மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட்டது” என்று கூறியுள்ளது.
அதானி நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் இதுகுறித்த எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள், மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு அதானியின் வளர்ச்சிக்கு துணைபுரிவதற்காக மாநிலத்தில் தங்கள் கைப்பாவையாக இருந்த அதிமுகவைப் பயன்படுத்தி இந்த ஊழலை செய்வதற்கு துணை நின்றிருக்கிறது.இது பாஜக ஆட்சியில் நடந்துள்ள
மிகப்பெரிய நிலக்கரி ஊழல் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here