மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் மோகன் லால். சமீபத்தில் இவ்ர் நடித்து வெளியான நேரு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மோகன்லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.