பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்: சோழர்களின் எழுச்சிக்கு முன் தஞ்சையை ஆண்ட வீர வரலாறு!

சோழர்களுக்கு முன் தஞ்சையை ஆண்ட பெரும்பிடுகு முத்தரையரின் மறைக்கப்பட்ட வீர வரலாறு!

Siva Balan
3075 Views
2 Min Read
2 Min Read
Highlights
  • முத்தரையர்கள் 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை தஞ்சையை 300 ஆண்டுகள் ஆண்டனர்.
  • இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) புகழ்பெற்ற மன்னர்.
  • சேரர்களை வஞ்சியில் வென்றார்; பாண்டியர் படையை யானைப் போரில் தோற்கடித்தார்.
  • போருக்கு முன்பே வாகை மலர் அணிந்து வெற்றியின் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
  • சுமார் 16 போர்களில் வெற்றி; வல்லக்கோன், தஞ்சைக்கோன் பட்டங்கள் பெற்றார்.

தமிழக வரலாற்றின் பக்கங்களில் சற்று மறைக்கப்பட்டிருந்தாலும், சோழர்களின் எழுச்சிக்கு முன்பே தஞ்சையை சுமார் 300 ஆண்டுகள் ஆண்ட பெருமைக்குரியவர்கள் முத்தரையர்கள். 9 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜராஜ சோழனை பலரும் அறிவர். ஆனால், 6 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை இந்த மண்ணை ஆண்ட முத்தரையர்களின் வீர வரலாறு பலருக்குத் தெரிவதில்லை. போர்க்களத்தில் வீரத்திலும், தமிழ் பற்றிலும் சிறந்து விளங்கிய முத்தரையர்கள், சில நேரங்களில் பல்லவர்களின் ஆதரவின் கீழ் சுதந்திரமாகவும் ஆட்சி செய்தனர்.

வரலாற்றாசிரியர் கே.ஜி. கிருஷ்ணன் அவர்களின் ஆய்வின்படி, முத்தரையர் ஆட்சி தெற்கே மேலத்தனையிலிருந்து வடக்கே மேலப்பழுவூர் வரையிலும், கிழக்கே திருக்கடிகாவலிலிருந்து மேற்கே குளித்தலை வரையிலும் பரந்து விரிந்திருந்தது. தமிழக வரலாற்றில் திருப்புமுனையாக, விஜயாலய சோழன் இந்த முத்தரையர்களிடமிருந்து ஆட்சியைப் பறித்து, சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். இதுவே சோழர்களின் பொற்கால ஆட்சிக்கு வித்திட்டது.

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்: ஒரு சாகச மன்னர்

இந்த வம்சத்தின் மணிமகுடமாகத் திகழ்ந்தவர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், அதாவது சுவரன் மாறன். இவரது சாதனைகளும், கலைத்திறனும் இன்றளவும் போற்றப்படுகின்றன. சரித்திர அறிஞர்கள் இவரை நரசிம்ம வர்ம பல்லவன் மற்றும் ராஜராஜ சோழன் போன்ற மாபெரும் ஆட்சியாளர்களுக்கு இணையாகப் புகழ்கின்றனர். அவரது போர்க்கள வெற்றிகளும், தமிழ் கவிஞர்களுக்கு அளித்த ஆதரவும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றன.

- Advertisement -

சேரர்களின் தலைநகரான வஞ்சியிலேயே சேரர்களை வென்று வாகை சூடியவர் சுவரன் மாறன். பல்லவர்களுக்கு ஆதரவாக பாண்டியர் படையை யானைப் போரில் தோற்கடித்தது இவரது வலிமைக்குச் சான்றாக அமைகிறது. வெற்றிக்குப் பிறகு வாகை மலர்களை அணிந்த மற்ற மன்னர்களைப் போலல்லாமல், பெரும்பிடுகு முத்தரையர் போருக்குப் போகும் முன்பே அதை அணிந்தாராம். இது அவரது அசைக்க முடியாத தன்னம்பிக்கையையும், வெற்றியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும் காட்டுகிறது.

வெற்றிகளும் பட்டங்களும்

தனது ஆட்சிக்காலத்தில் சுமார் 16 போர்களில் வெற்றி பெற்றிருக்கிறார் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர். பெரும்பாலான வெற்றிகள் தனிப்பட்ட முறையில், தனது சொந்த வலிமையால் பெறப்பட்டவை. அவரது வீரத்தையும், ஞானத்தையும் பாராட்டி பல பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செந்தலை சுந்தரேஸ்வரர் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் பல வெற்றிகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிள்ளுக்கோட்டை கல்வெட்டும் இவரைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.

பல்லத்தில் ஒரு வலிமையான கோட்டையை கட்டியதற்காக ‘வல்லக்கோன்’ என்ற பட்டத்தையும், தஞ்சாவூர் மற்றும் வல்லத்தில் இவர் ஏற்படுத்திய வரலாற்று முக்கியத்துவம் காரணமாக ‘தஞ்சைக்கோன்’ என்ற பட்டத்தையும் பெற்றார். சுவரன் மாறன் என்ற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் வீர வரலாற்றை தஞ்சாவூர் எப்போதும் பெருமையுடன் நினைவுகூறும். இவரைப் போன்ற மறைக்கப்பட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து கொள்வது நமது கடந்தகால பெருமையை உணர்த்தும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply