வாரத்தின் முதல் நாளான இன்று, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மே 19ஆம் தேதியான இன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 அதிகரித்து ரூ.8,755 ஆகவும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.70,040 ஆகவும் விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.70,000 என்ற எல்லையைத் தாண்டியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் விலையும் கிராமிற்கு ரூ.38 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.1 உயர்ந்து கிலோ ரூ.1,09,000 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல்கள் மற்றும் பங்குச் சந்தை நிலவரங்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.