பிஎப் தொகை பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு

Priya
1421 Views
2 Min Read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்​தம் செய்வதற்​கான சம்பள உச்ச வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது.

சமூக​பாது​காப்பு திட்​டத்​தின் கீழ் பிஎப் சலுகைகளைப் பெறுவதற்கான மாதாந்​திர அடிப்​படை சம்பள வரம்பு 2004 முதல் 2014 வரை ரூ.6,500 ஆக இருந்​தது. இது 2014-ல் ரூ.15 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டது. இதன்​படி, புதி​தாக வேலைக்கு சேர்​பவர்​களின் அடிப்​படை சம்​பளம் ரூ.15,000 ஆக இருந்தால் மட்டுமே கட்​டாய சமூக பாது​காப்பு கிடைத்தது. அதற்கு மேல் சம்​பளம் பெற்று புதிதாக சேர்பவர்​களை நிறு​வனங்​கள் கட்​டாய​மாக பிஎப்​-க்​குள் சேர்க்க வேண்​டிய​தில்​லை.

அப்​படியே சேர்க்​கப்​பட்டு அவர்​களின் சம்​பளம் ரூ.1 லட்​ச​மாக இருந்​தா​லும், ரூ.15,000 வரம்பை பின்​பற்றி ஊழியர் மற்​றும் நிறுவனம் தலா ரூ.1,800 பங்​களிப்பு செலுத்​தி​னால் போதும். இந்த ஊதிய வரம்பை உயர்த்த வேண்​டும் என தொழிலா​ளர் நல அமைப்​பு​கள் கோரி வந்​தன. அதன்​படி பிஎப் தொகை பிடித்​தம் செய்​வதற்​கான மாத சம்பள வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்​தும் திட்​டம் முன் வைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று நடந்த மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில் இந்த திட்​டத்​துக்கு ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது. இந்​தத் திட்​டம் இன்று முதல் அமலுக்கு வரு​கிறது. இதன் வாயி​லாக, ஊழியர்​களின் மாதாந்​திர பிஎப் பங்களிப்பு 3,000 ரூபா​யாக அதி​கரிக்​கும். நிறு​வன​மும் அதே அளவு பங்​களிப்பு செய்ய வேண்​டி​யிருக்​கும். பிஎப் சேமிப்​பும், ஓய்வூ​திய நிதிக்​கான பங்​களிப்​பும் அதி​கரித்​து, நீண்​ட​கால சமூக பாது​காப்பு வலுப்​பெறும்​.

இதன் மூலம் 51 லட்​சத்​துக்​கும் அதி​கா​மானோர் பயனடைவார்கள். குறிப்​பாக, அவர்​களுக்​கு, பிஎப் சேமிப்​பு, ஊழியர்​களின் ஓய்​வூ​தி​யத் திட்​டம் மூல​மான ஓய்​வூ​திய பலன்​கள், ஊழியர்​களின் வைப்பு நிதி சார்ந்த காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் காப்​பீட்​டுப் பாதுகாப்பு ஆகியவை உரிய விதி​களின்​படி தடையின்றி கிடைக்​கும்.

சம்பள வரம்பு உயர்த்​தப்​பட்​டதைத் தொடர்ந்​து, மத்​திய அரசுக்கு ஆண்​டுக்கு சுமார் ரூ.11,339 கோடி கூடு​தலாக செல​வாகும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இது தற்​போது வழங்​கப்​பட்டு வரும் ஆண்டறிக்கை நிதி ஆதர​வான ரூ.10,250 கோடியை விட அதிகமாகும். அடுத்த ஐந்து ஆண்​டு​களில் இத்​திட்​டத்​துக்கு தோராய​மாக ரூ.56,696 கோடி செல​விடப்​படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply