திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்கத் தேர்​தல்: கே.​பாக்​ய​ராஜ் பெயரில் 2 அணி​கள் மோதல்

Priya
26 Views
1 Min Read

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடத்​தப்​படு​வது வழக்​கம். பழைய நிர்​வாகி​களின் பதவி காலம் முடிவடைந்​த​தால், கடந்த 12ம் தேதி தேர்​தல் நடை​பெற இருந்​தது. இச்​சங்​கத்​தின் தலைவராக இருந்த கே.​பாக்​ய​ராஜ் மறைவை அடுத்து தேர்​தல் தள்ளி வைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இச்​சங்​கத்​தின் தேர்​தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடை​பெறுகிறது. தலை​வர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலை​மை​யில் ‘திரைக்​கதை மன்​னன் கே.பாக்யராஜ்’ என்ற அணி​யும் சேரன் தலை​மை​யில் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ என்ற அணி​யும் போட்​டி​யிடு​கின்​றன. இரு அணிகளும் கே.​பாக்​ய​ராஜ் பெயரிலேயே போட்​டி​யிடு​கின்​றன.

பொதுச்​செய​லா​ளர் பதவிக்கு மனோஜ் குமார், பட்​டுக்​கோட்டை பிர​பாகர், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலி​கான், ஆர்​.சுந்​தர் ராஜன், 2 பேர் கொண்ட துணைத் தலை​வர் பதவிக்​கு, யார் கண்ணன், சமுத்​திரக் ​க​னி, சினேகன், ஏ.வெங்​கடேஷ் உள்ளிட்டோர் போட்​டி​யிடு​கின்​றனர். 4 பேர் கொண்ட இணைச் செய​லா​ளர் பதவிக்கு 8 பேரும் 12 பேர் கொண்ட செயற்​குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் போட்​டி​யிடு​கின்​றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply