தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 32.80 செ.மீ., மழை பெய்யும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் 1 முதல், ஜூலை 29 வரையிலான காலகட்டத்தில், தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 55 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதாவது, இந்த இரு மாதங்களில் வழக்கமாக, 11.5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 17.9 செ.மீ., பெய்துள்ளது. அதேநேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 21.6 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவான 3.8 செ.மீ.,யை விட, 4.58 சதவீதம் அதிகம்.
மேலும் அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலுார், திருவாரூர், துாத்துக்குடி மாவட்டங்களில், இயல்பை விட குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. இவை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை, நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில், 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்துள்ளது என்று இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.